மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தென்னிந்தியாவில் மூன்று மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் தலைமையிலான அதிரடி போலீஸார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்நிலையில், வீரப்பன் சம்பவத்தை, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் ‛வீரப்பன் - சேசிங் தி பிரிகண்ட்' என்ற பெயரில் புத்தமாக எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அக்ஷ்ய் குமாரிடம், வீரப்பன் - விஜய குமார் இந்த இரண்டு ரோல்களில் உங்களுக்கு யாருடைய ரோலில் நடிக்க ஆசை என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், ‛‛இரண்டு பேரின் கேரக்டரும் மிகவும் ஆர்வம் அளிக்கும் வகையில் உள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் நான், விஜயகுமார் ரோலில் தான் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்த ஆபரேஷனை பக்காவாக திட்டமிட்டு, அதை தனது புத்திசாலிதனத்தால் வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் அவர் தான்'' என்று கூறியுள்ளார்.