மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ள பாகுபலி-2 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ளது. பாகுபலி படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பாகுபலி-2 படத்திற்கும் இசையமைத்துள்ளார். மார்ச் 26ல் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ள பாகுபலி-2 பாடல்கள் வெளியீட்டு விழாவிற்கு பிரம்மாண்டமாக இயக்குனர் ராஜமௌலி ஏற்பாடுகள் செய்து வருகின்றார்.
ஏராளமான ரசிகர்கள் பங்கேற்கவிருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடிகைள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் பாலிவுட்டின் முன்னணி இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாகுபலி-2 பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொள்வார் என தகவல் வெளிவந்துள்ளது.
இயக்குனர் ராஜமௌலியின் நெருங்கிய நண்பரான கரண் ஜோஹர், பாகுபலி படத்தின் ஹிந்தி வி நியோக உரிமையை வாங்கியவர். ஹிந்தியில் பாகுபலி படம் வெற்றி அடைய கரண் ஜோஹரும் ஒரு வகையில் காரணம் எனலாம். இதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் கரண் ஜோஹரை முன்னிலைப்படுத்த ராஜமௌலி திட்டமிட்டுள்ளாராம். பாகுபலி-2 படத்தின் பாடல்கள் உரிமத்தை லஹாரி ஆடியோ நிறுவனம் ரூ 4.5 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.