மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையில் இருந்து தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டே போகிறார். தற்போது, அவர் ‛பில்லாரி என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்துள்ளார். கூடவே ஒரு ராப் பாடலும் பாடியிருக்கிறார். இரண்டு வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக உள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா, பேயாக நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார்.
அப்போது அவர் பேசுகையில், படத்தில் பேயாக நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பொதுவாக நடிகர்கள் உயிர் உள்ளவர் போன்று தான் அதிகம் நடிப்பர். ஆனால், இந்தப்படத்தில் உயிரில்லாமல் நடித்தது மிகவும் அருமையாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. எப்பவும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்றவர், பேயயை ஆதரித்தும் பேசினார்.
‛பில்லாரி'படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.