விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் ஷாரூக்கானுக்கு, இந்தாண்டு யாஷ் சோப்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான விழா மும்பையில் நேற்று நடந்தது. விருதை பெற்று கொண்ட பின்னர் பேசிய ஷாரூக்கான்... ‛‛என்னுடைய 25 ஆண்டுகால சினிமா வரலாற்றில் என்னுடைய பெரும்பாலான படங்கள் யாஷ் ராஜ் பிலிம் தயாரிப்பாகத்தான் இருக்கும். என்னை அவர், ஒரு மகன் போன்று தான் பாவித்தார். நான் ஒன்றும் அழகான நடிகர் கிடையாது, ரொமான்ட்டிக் ரோலில் நடிக்க ஏற்ற தோற்றமும் என்னிடம் இல்லை. இருந்தாலும் யாஷ் சோப்ரா என்னிடம், நீ ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கவில்லை என்றால் உன் சினிமா பயணம் சிறப்பாக இருக்காது என்றார். அவரது அறிவுரையை ஏற்று, அவர் சொன்னபடி பயணித்தேன், அதற்கான பலனும் கிடைத்தது. என் சினிமா கேரியரில் யாஷ் ராஜ் சோப்ராவின் பங்கு, அவரது தனிக்கவனம் மிக முக்கியமானது'' என்று கூறியுள்ளார்.