மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இந்தியா - சீனா கூட்டுத் தயாரிப்பான குங்பூ யோகா படம் விரைவில் வெளிவர உள்ளது. இதில் ஜாக்கிசான், அமைரா, ஆரிப் ரஹ்மான், சோனு சூட், திஷா பட்டானி நடித்துள்ளனர். ஸ்டேன்லி டாங் இயக்கி உள்ளார். இந்தப்படம் இந்த மாதம் 26-ம் தேதி சிங்கப்பூரிலும், 28ந் தேதி சீனாவிலும், பிப்ரவரி 3ந் தேதி இந்தியாவிலும் வெளிவருகிறது. இதையொட்டி ஜாக்கிசான் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
நான் எந்தப் படத்தில் நடித்தாலும் அதற்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து நடிப்பதில்லை. காரணம் விருதுகளுக்கு நான் தகுதியானவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். எனது படங்களும் விருதுகளுக்கானவை அல்ல. அவை ரசிகர்களுக்கானவை. எனது படம் வசூலில் சாதனை படைத்தாலும், தோற்றாலும் வாழ்நாள் முழுக்க படம் எடுப்பேன். அதற்காக ரிஸ்க் எடுப்பேன்.
50 வருடங்களாக நான் மாறாமல் இருக்கிறேன். தொடர்ந்து உழைக்கிறேன். ஆஸ்கர் விருதுதான் என்னை தேடி வந்தது. நான் விருதை தேடிப்போகவில்லை. எனது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன். இந்திய கலைஞர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். குங்பூ யோகா பல புதிய சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறேன். என்றார் ஜாக்கிசான்.