மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
அரைடஜன் படங்களுக்கு மேல் நடித்து கொண்டு பாலிவுட்டில் பிஸி மேனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அக்ஷ்ய் குமார், இயக்குநர் பால்கி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அக்ஷ்ய் குமாரின் மனைவி டுவிங்கிள் கண்ணா தயாரிக்கிறார். அக்ஷ்ய் உடன் சோனம் கபூர் மற்றும் ராதிகா ஆப்தே என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த தமிழகத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக உள்ளது. மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்த நிலையில் படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்திற்கு ‛பேடு மேன்' என்று பெயரிட்டுள்ளார்கள். மார்ச்சில் தொடங்கி இந்தாண்டு இறுதிக்குள்ளேயே படப்பிடிப்பை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.