மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பிரபல பாலிவுட் டைரக்டர் பிரகாஷ் ஜாவிடம் 3 கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அவரது முன்னாள் பார்ட்னர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகி, சர்ச்சையை கிளப்பிய "ஆராக்ஷ்ன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் டைரக்டர் பிரகாஷ்ஜா. இவர் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கடந்த 2004ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களான பிரமோத் பாந்தி மற்றும் தேவேந்திர சிங் ஆகியோருடன் சேர்ந்து ஒரு படம் இயக்க திட்டமிட்டேன். படத்திற்கான கதையும் ரெடியாகிவிட்டது. இதற்காக எனக்கு ரூ.24.5 லட்சம் கொடுத்தனர். ஆனால் கடைசியில் சிலபல காரணங்களால் படம் எடுக்க முடியவில்லை. இதனையடுத்து அவர்கள் எனக்கு கொடுத்த ரூ.24.5 லட்சத்தையும் அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேன்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே எனக்கு பிரமோத் பாந்தி மற்றும் தேவேந்திர சிங் ஆகியோரிடமிருந்து போன் மற்றும் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்து கொண்டு இருக்கிறது. எங்க இருவருக்கும் நீங்கள் 3கோடி ரூபாய் தரவேண்டும் இல்லாவிட்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இதனால் இருவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமது புகார் மனுவில் கூறியுள்ளார்.
பிரகாஷ்ஜாவின் புகார் மனுவை ஏற்று வெளிநாடுவாழ் இந்தியர்களான பிரமோத் பாந்தி மற்றும் தேவேந்திர சிங் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.