சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ரன்பீர்கபூரும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் நடித்து வெற்றியடைந்த படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'.பாலிவுட்டில் இருக்கும் பிரபல இயக்குநர்களில் சஞ்சய் குப்தாவும் ஒருவர். தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‛காபில்'. சஞ்சய் குப்தா இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். நிகழ்ச்சியில் பங்கேற்ற சஞ்சய் தனது அடுத்த படமான ‛பிகாடே நவாப்' படத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க துடிப்பதாக கூறினார்.
இதைப்பற்றி சஞ்சய் குப்தா கூறியதாவது...." நான் ரொம்ப விரும்பும் ஒரு நடிகர் அது தான் ரன்பீர் கபூர். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது கனவு. ரன்பீர் என்று மட்டுமே ஒரு கதையை நான் வைத்து இருக்கிறேன், அந்த கதையை இதுவரை நான் யாரிடமும் கூறியது இல்லை. இந்த படத்தை நான் இயக்குவேன் என்றால் படத்தின் ஹீரோ ரன்பீர் தான். படத்தின் கதையை நான் அவரை எண்ணியே எழுதினேன். அவரை தவிர யாரையும் அந்த படத்தில் என்னால் நடிக்க வைக்க முடியாது" என்று கூறினார்.