மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங், சமீபத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு ஆயத்த ஆடை விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில் அலுவலகத்திற்கு வேலைக்கு வரும் பெண்ணை அவர் தோளில் சுமந்து கொண்டு நிற்பது போலவும், அதை லிஃப்ட்டில் ஒரு பட்லர் நின்று சிரித்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பது போலவும் இடம் பெற்றிருக்கிறது. அதோடு, “பின்னால் பிடிக்க வேண்டாம், வேலையை வீட்டில் செய்யுங்கள்” என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்திற்கு சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதற்காக நடிகர் ரன்வீர் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து ரன்வீர் சிங் கூறியிருப்பதாவது... ‛‛ஆடைகள் தொடர்பான விளம்பரங்களை பிரபலப்படுத்த அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. நாங்கள் ஒன்று செய்யப்போக அதுவேறு மாதிரி பிரச்னையாகிவிட்டது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், மன்னிப்பும் கேட்கிறேன். இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு வந்தவுடனேயே சுமார் 30 நகரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை இரவோடு இரவாக அகற்றிவிட்டோம். பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கத்தில் அந்த விளம்பரத்தில் நான் நடிக்கவில்லை. சினிமாவிலும் சரி, நிஜ வாழ்விலும் சரி, பெண்கள் மீது எப்போதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். ஒருபோதும் அவர்களை அவமதிக்கும் வகையில் நடக்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார்.