ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருக்கும் இளம் ஹீரோயின்களில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் அனுஷ்கா, ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள படம் ‛ஏ தில் ஹே முஷ்கில்'. சமீபத்தில் இப்படத்திற்காக நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில், கரண் ஜோகர் போன்று ஒரு இயக்குநருடன் பணியாற்றும் போது என்னை தனிப்பட்டு யாரும் கவனிக்கும் படி செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதைப்பற்றி அனுஷ்கா கூறியதாவது.... "நடிப்பில் ஆர்வம் காட்டுவதால் என்னை நான் மிகவும் கவனித்து கொள்ள மாட்டேன். அதிலும் கரணுடன் பணியாற்றும் போது நடிப்பில் மட்டும் தான் அதிக கவனம் இருக்கும், அப்போது தான் படத்தில் நம்முடைய நடிப்பு சிறப்பானதாக இருக்கும். படத்தில் நம்மை அவ்வளவு அழகாக காட்டிவிடுவார் கரண், இப்படியொரு சூழலில் என்னை யாரும் கவனிக்கும்படி நான் என்னை பிரதிபலிக்க மாட்டேன்" என்றார்.