மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் கடந்து ஹாலிவுட்டிலும் நடிக்க தொடங்கிவிட்ட தீபிகா படுகோனே, இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள ‛பத்மாவதி' படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இதனிடையே தீபிகா, இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பாக உள்ள படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை தீபிகா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி தீபிகாவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தில், தீபிகா, சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இதுமுற்றிலும் பொய்யான தகவல், அவர் அடுத்தப்படியாக பத்மாவதி படத்தில் தான் நடிக்க தயாராகி வருகிறார், வேறு எந்தப்படத்திலும் அவர் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.