விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலம் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தசம்பவத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்தியாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் பாகிஸ்தான் நடிகர்களான பவாத்கான், மகிரான் ஆகியோர் 48 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கூறியிருந்தது. மேலும் பா.ஜா., கட்சியினரும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பவாத்கான் மற்றும் மகிராவிற்கு இயக்குநர் விக்ரம் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛பாகிஸ்தான் பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்பதில் நாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் நடந்து தான் வருகிறது, நிறையபேர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் நாமோ, கிரிக்கெட் வீரர்களையும், நடிகர்களையும் தடை செய்வதில் தான் குறியாக உள்ளோம்'' என்று கூறியுள்ளார்.