மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
டைரக்டர் திலிப் மேத்தா, நடிகை சன்னி லியோனை பற்றி ஆவண படம் ஒன்றை இயக்கி வந்தார். சன்னி லியோனுக்கும், திலிப் மேத்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. சமீபத்தில் சன்னி லியோனிடம், " மோஸ்ட்லி சன்னி பார்ட்லி க்ளவ்டி" என பெயரிடப்பட்டுள்ள ஆவண படத்தை ஏன் இந்தியாவில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என கூறுகிறீர்கள் என காரணம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், என்னை பற்றிய ஆவண படம் டைரக்டரின் விருப்பம். ஆனால் அதனை என் அனுமதி இல்லாமல் அவர் மற்றவர்களிடம் காட்டியது தவறு. இது இந்தியாவில் வராது என நம்புகிறேன். ஏனெனில் அந்த கதை என் வாழ்க்கையில் நடந்தது அல்ல. இது யாரோ ஒருவருடைய கற்பனை, யாரோ ஒருவருடைய பார்வை.
உங்கள் வாழ்க்கை கதையை உங்கள் அனுமதி இல்லாமல் மற்றவர்களிடம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது ஒன்றும் எனது வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ஆவண படம் இல்லை. நீங்கள் சினிமா சுதந்திரம் கேட்க இது உங்களை பற்றியது இல்லை. இது யாரோ ஒருவருடைய வாழ்க்கை. இது என் வாழ்க்கை. இது தனிப்பட்டதாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார். இந்த ஆவணப் படத்தில் உள்ள சில காட்சிகளை டைரக்டர் திலிப் மேத்தா நீக்க வேண்டும் என விரும்புகிறாராம். ஆனால் அதற்கு டைரக்டர் தயாராக இல்லையாம். இதனால் இந்தியாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சன்னி லியோன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம்.