விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அமிதாப் குடும்பத்தினர் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்...?, எதற்காக...?
‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பீரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். இந்த காட்சிகளை பார்த்துவிட்டு அபிஷேக், அமிதாப்பச்சன் உள்ளிட்ட குடும்பத்தார் ஐஸ்வர்யா ராய் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதனிடையே இப்படத்தின் கதையை சொல்லும்போதே இதுபோன்ற காட்சிகள் எல்லாம் இருக்கிறது என்று ஐஸ்வர்யா குடும்பத்தினரிடம் கரண் ஜோகர் கூறியதாகவும், ஆனால் அப்போது யாரும் எதிர்ப்பு தெரிக்கவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் ரிலீஸாகும் போது ரன்பீர்-ஐஸ்வர்யா இருக்கும் நெருக்கமான காட்சிகளை நீக்கும்படி அமிதாப் குடும்பத்தார் தரப்பிலிருந்து கேட்டு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.