இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! |
ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு படங்களின் இயக்குநர் ஆனந்த் எல் ராய், அடுத்தப்படியாக ஷாரூக்கானை வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் துவங்குகிறது. ஹீரோயின் யார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆலியாபட் நடிப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் ஆன்ந்த் எல் ராய், தன் பட ஹீரோயினை டிசம்பரில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் இதுப்பற்றி கூறியிருப்பதாவது... ‛‛இது மிகவும் முக்கியமான படம், எனக்கு மட்டுமல்ல இப்படத்தில் நடிக்கும் அனைவருக்கும் தான். இது ஒரு வித்தியாசமான கதை, இப்படியொரு கதையை சொல்ல முக்கியமான காரணமும் உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் படம் இயக்கும்போது என்னை நானே வளர்த்து கொள்வேன். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் ஆரம்பமாக உள்ளது. அந்தமாதே இப்பட ஹீரோயினை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.