மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடிகர் சல்மான்கான் எந்தளவுக்கு பிரபலமான முன்னணி நடிகராக இருக்கிறாரோ அதே அளவுக்கு ஏதாவது சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். சமீபத்தில் சுல்தான் படம் தொடர்பாக அவர் சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, சல்மான் ஷூட்டிங்கில் பங்றே்று வரும் போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போன்று தான் உணர்ந்ததாக கூறினார். சல்மானின் இந்த பேச்சிற்கு பெண்கள் மத்தியில் அதிருப்தி கிளம்ப அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற குரல் மேலோங்கியது. மேலும் இது தொடர்பாக அவர் மீது சில மாநிலங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சல்மானின் இந்த கருத்தால் இந்திய ஒலிம்பில் நல்லெண்ண தூதர் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ரியோ விளையாட்டு இணை செயலாளர் ராகேஷ் குப்தா கூறியுள்ளதாவது... சல்மான்கான், ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுமையாக உழைத்திருக்கலாம், அதற்கு உதாரணமாக அந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்க கூடாது, வேறு எதையாவது உதாரணமாக சொல்லியிருக்கலாம். இந்திய ஒலிம்பிக் நல்லெண்ண தூதராகவும் சல்மான் உள்ளார். அவரின் இந்த பேச்சு இந்திய விளையாட்டு துறையையும் கலங்கப்படுத்துவது போன்று உள்ளது. சல்மான்கான் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.