மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சமீபகாலமாக கமர்ஷியல் படங்களை காட்டிலும் யதார்த்த படங்கள் தான் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறுகின்றன. இது நல்ல விஷயம் என்கிறார் அக்ஷ்ய் குமார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் தற்போது 'ஹவுஸ்புல்-3' படம் வெளிவர இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷ்ய் பேசியதாவது... ''யதார்த்தமான படங்களை ரசிகர்கள் வரவேற்பது மகிழ்ச்சி, இது ஒரு அருமையான விஷயம். நான் 'ஸ்பெஷல் 26' படத்தில் நடித்தேன். இது ரூ.70 முதல் 80 கோடி வரை வசூலித்தது. அதேப்போன்று 'பேபி' படம் ரூ.90 கோடி வசூலித்தது, ஏர்லிப்ட் படம் ரூ.125 கோடி வசூலித்தது. நீர்ஜா படமும் சூப்பர் ஹிட்டானது, நல்ல வசூல் செய்திருக்கிறது என்று சொன்னார்கள், ஆனால் எவ்வளவு என்று தெரியவில்லை. இந்தப்படங்கள் எல்லாமே யதார்த்த படங்கள் தான். இதை ரசிகர்கள் எல்லாம் மிகவும் விரும்பி பார்த்ததால் தான் ஹிட்டாக அமைந்தன என்று கூறியுள்ளார்.