ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? |
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பர்கான் அக்தர். 'பாக் மில்கா பாக்' படம் மூலம் ஒரு நடிகராக பிரபலமானார். இப்படம் இந்திய தடகளவீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. இதனிடையே சமீபத்தில் பிரேசிலில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான்கானை நியமித்தது இந்திய ஒலிம்பிக் சங்கம். இதற்கு மில்காசிங், யோகஸ்வர் தத் போன்ற வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் சல்மானுக்கு ஆதரவாக சில நடிகர்களும் குரல் கொடுத்தனர். இப்போது மில்கா சிங்கிற்கு ஆதரவாக நடிகர் பர்கான் அக்தர் பேசியிருக்கிறார்.
பர்கான் கூறியுள்ளதாவது... ''மில்கா சிங், தன்னுடைய கருத்தை சொல்ல முழு சுதந்திரம் உள்ளது. சல்மானுக்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை. யாரை நியமிப்பது என்று நாம் முடிவு செய்யமுடியாது. இந்திய ஒலிம்பிக் சங்கம் இவர் சரியாக இருப்பார் என்று ஒருவரை நியமித்தால் அவரை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். இங்கு யாரும், யாரைப்பற்றியும் தவறாக பேசவில்லை, ஆனால் மீடியாக்கள் தான் தேவையில்லாமல் இதுபோன்ற விஷயங்களை எல்லாம் பெரிதுப்படுத்தி பிரச்னைக்கு உள்ளாக்குகின்றனர் என்று கூறியுள்ளார்.