மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, நடிகர் கரண் சிங் குரோவரை வருகிற ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது திருமண வேலைகளில் பிபாஷாவும், கரணும் பிஸியாக உள்ளனர். இதனிடைய சில தினங்களுக்கு முன்னர் பிபாஷா, தனது முன்னாள் காதலர்கள் யாரையும் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று ஒரு செய்தி வெளியானது. அதில் முக்கியமானவர் ஜான் ஆபிரஹாம். ஜானும், பிபாஷாவும் நீண்டநாள் காதலித்தனர், இருவரும் திருமணத்தில் இணைவர் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜானிடம், பிபாஷா பாசுவின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார் ஜான். எதற்காக ஜான், பிபாஷாவின் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்பது அவருக்கே வெளிச்சம்.