‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகர் சசி கபூருக்கு, மும்பையில் நடைபெற்ற விழாவில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தாதா சாகிப் பால்கே விருது வழங்கி கவுரவித்தார்.
திரையுலகிற்கு சசி கபூர் அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு, சசி கபூருக்கு தாதா சாகிப் பால்கே விருது அறிவித்திருந்தது. இம்மாதம் 3ம் தேதி, டில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில் பால்கே விருது மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசி கபூருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், சசிகபூரால், பால்கே விருது பெற இயலவில்லை. இதனிடையே, மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சசி கபூருக்கு, பால்கே விருது வழங்கி கவுரவித்தார்.