தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் |
பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால், அண்டைநாடுகளுடனான நட்பை பலப்படுத்துவேன் என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். கிஸ்மத் லவ் பைசா தில்லி படத்தின் தோல்விக்கு பிறகு, சில காலம், திரையுலகில் இருந்து ஒதுங்கியிருந்த மல்லிகா ஷெராவத், தற்போது, டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் மூலம், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மல்லிகா கூறியதாவது, தூய்மையான அரசியலே, நாட்டின் தற்போதைய இன்றியமையாத தேவையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி வழங்கினால், அண்டைநாடுகளுடனான நட்பை பலப்படுத்துவேன். தூய்மையான அரசியல் மேற்கொள்வேன். நான் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைவரும் தூய்மையான அரசியலையே விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.