மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
'டுவிட்டர் நாயகன்' என்றுதான் ராம்கோபால் வர்மாவை அழைக்க வேண்டும். அந்த அளவிற்கு அடிக்கடி பிரச்சனைக்குரிய விஷயங்களைப் பற்றி டுவிட்டரில் பதிவு செய்து பரபரப்பை கிளப்பி வருகிறார். அவருடைய படங்கள்தான் சர்ச்சையைக் கிளப்புவதா இருக்கிறதென்று பார்த்தால், அவர் சொல்வதும் சர்ச்சைக்குரியதாகவே மாறி வருகிறது. இனி, டுவிட்டர் சர்ச்சையை கொஞ்ச காலம் அவர் ஒதுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்து ஒரு நிஜ வாழ்க்கையைப் பற்றிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் சிலரின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து “சர்க்கார், ரத்த சரித்ரா, கம்பெனி” ஆகிய படங்களை இயக்கினார். அந்தப் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.
அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய படம் ஒன்றை ராம்கோபால் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சனை அணுகினாராம். ஆனால், அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். அமிதாப்புக்கு நெருக்கமானவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் படமெடுக்கும் ராம்கோபால் வர்மாவை தற்போது தவிர்ப்பது நலம் என்றும் ஆலோசனை சொல்லி வருகிறார்களாம். அமிதாப் மறுத்தாலும் வேறு ஒருவரை நடிக்க வைக்கும் முடிவிலும் ராம்கோபால் வர்மா இருக்கிறாராம். ஆனாலும், அமிதாப்தான் அவருடைய முதல் சாய்ஸ் என்கிறார்கள். இப்படம் பற்றிய செய்தியை ராம்கோபால் வர்மா டுவிட்டரில் போடாமலா விட்டு விடுவார்...பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...