ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! |
இந்திய சாதனையாளர்கள், சமூக விழிப்புணர்வு சார்ந்த படங்களை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசு அவற்றிற்கு வரி விலக்க அளித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சர்தானி, மேரி கோம் ஆகிய படங்கள் வரிவிலக்கு பெற்றுள்ளன. இந்த வரிசையில் தற்போது ரோர்-டைகர்ஸ் ஆப் சுந்தர்பன்ஸ் படமும் சேர உள்ளது.
புலிகள் வேட்டையாடப்படுவது மற்றும் சுந்தரவன காடுகள் அழிக்கப்பட்டு வருவது தொடர்பாகவும் இந்த படத்தில் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. கோபம் கொண்ட புலிகள் சுந்தரவனக் காடுகளைச் சுற்றி வசிக்கும் மக்களை துன்புறுத்தி வருகின்றன. அதனால் அந்த கிராம வாசிகள் அந்த புலிகளை வேட்டையாட தயாராகிறார்கள். அந்த புலிகள் கொல்லப்படுகின்றனவா? அந்த மக்கள் புலிகளிடம் இருந்து தங்களை எப்படி காத்துக் கொள்கின்றனர்? மக்கள் தங்கள் நிலங்களை கையகப்படுத்துவதற்காக புலிகளை கொல்வது அவசியமா? என்பதை விளக்குவது தான், ரோர்ஸ்-டைகர்ஸ் ஆப் சுந்தபன்ஸ் படத்தின் கதை.
இது ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய படம் என படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்தியர்கள் அனைவரையும் இந்த படத்தை பார்க்கச் செய்வதற்காக ஊக்கப்படுத்தும் வகையில் இந்த படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புலிகளை பாதுகாப்பது மற்றும் வனங்களை பாதுகாப்பதை வலியுறுத்துவதற்காக இந்த கோரிக்கையை அரசு ஏற்று, வரி விலக்கு அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.