விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
மலையாள சினிமாவில், பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற தீவிர முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டிருந்த போதுதான், திடீரென்று, ஆண்ட்ரியாவை திருமணம் செய்து கொள்ள தயாராகயிருப்பதாக, ஒரு பேட்டியில் தெரிவித்தார் பஹத் பாசில். தன்னிடம், இதுபற்றி எதுவும் பேசாமலே, இப்படி தடாலென்று, பஹத் கூறியதை அடுத்து, உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆண்ட்ரியா, பின், மலையாள படங்களில் நடிப்பதையும் தவிர்த்தார். இப்போது பஹத் பாசில்- நஸ்ரியா திருமணம் உறுதியாகியுள்ளதால், இனி அவரால் தன் இமேஜுக்கு, எந்தவித களங்கமும் ஏற்படாது என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. ஆனால், அதே படத்தில், இன்னொரு நாயகியாக ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த ஸ்ரேயா, இப்போது வெளியேறியுள்ளார். ஆண்ட்ரியா இப்படத்திற்குள் வந்த பின், அவரை மெயின் ஹீரோயினாக்கி விட்டு, என்னை டம்மியாக்கி விட்டனர். அதன் காரணமாகவே, நான், படத்திலிருந்து விலகிவிட்டேன் என, குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா.