Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ்

06 மார், 2025 - 03:54 IST
எழுத்தின் அளவு:
I-am-trying-to-do-my-job-well---Gajaraj-Rao

பாலிவுட்டின் பிரபல நடிகர் கஜராஜ் ராவ். எந்தவித வேடம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்பவர். தற்போது ‛துபைய்யா' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சோனம் நாயர் இயக்க, ஸ்பார்ஸ் ஸ்ரீவஸ்தாவா, ரேணுகா ஷானே, புவன் அரோரா(அமரன் படத்தில் சிப்பாய் விக்ரம் சிங்காக நடித்தவர்) உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மார்ச் 7ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதுதொடர்பாக கஜராஜ் ராவ் அளித்த பேட்டி...

துபைய்யா வாய்ப்பு எப்படி வந்தது?
சோனம் நாயரின் மசாபா மசாபா சீசன் 2வில் சிறப்பு ரோலில் நடித்தேன். அந்தசமயம் அவரது வேலை எனக்கு பிடித்தது. அப்போதே அவரிடம் உங்களது அடுத்த படத்தில் ரோல் எதுவும் இருந்தால் என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். ஒருநாள் இந்த படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து துபைய்யா பட வாய்ப்பு வந்தது. சோனம் நாயர் இயக்குகிறார், இதில் நடிக்கிறீர்களா என கேட்டார். கதையை படித்து பார்த்தேன், பிடித்தது, நடித்தேன்.

டூ வீலர் சம்பந்தமான கதை... உங்கள் வாழ்க்கையில் இதுதொடர்பாக நடந்த சம்பவம் எதுவும் உண்டா?
ஆரம்ப காலத்தில் நான் டில்லியில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தேன். அந்தநேரத்தில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார், நாங்கள் இருவரும் எப்போதும் அவரது பைக்கில் தான் படப்பிடிப்புக்கு செல்வோம். ஒரு நாள் நான் பைக் ஓட்டுகிறேன் என்றேன். அப்போது நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, ​​திடீரென இரண்டு லாரிகளுக்கு இடையே எனது பைக் வந்தது. லாரிகளுக்கு இடையில் இருந்து பைக்கை வெளியே எடுக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் முடியவில்லை. பயத்தில் எனது கைகள் நடுங்கின. இரண்டு லாரிகளின் ஓட்டுநர்களும் என்னை திட்டினார்கள். அப்போது முதல் நான் பைக் ஓட்டுவதும் இல்லை, பைக்கும் வாங்கவில்லை.

படம் அல்லது சீரிஸ் அதில் நடிக்கும்போது இது பார்வையாளர்களை கவரும் என உணர்ந்தது உண்டா... அவர்களின் நம்பிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மக்கள் எங்கள் மீது நம்பிக்கை கொள்வது நன்றாகத்தான் இருக்கிறது. அதேநேரம் பொறுப்பும் அதிகரிக்கிறது. இன்றைக்கு விமான நிலையம், வணிக வளாகம், உணவகம் என எல்லா இடங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை அடையாளம் கண்டு போட்டோ எடுக்கிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களின் அன்பை பார்க்கையில் இந்த அன்பு தொடர நான் இன்னும் என் வேலையை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சாவா' : 2025ன் முதல் ரூ.500 கோடி படம்'சாவா' : 2025ன் முதல் ரூ.500 கோடி படம் கல்பனா தற்கொலை முயற்சியா? : மகள் விளக்கம் கல்பனா தற்கொலை முயற்சியா? : மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in