பள்ளி ஆசிரியர்களே என் உயர்வுக்கு காரணம் : பழைய நினைவுகளை பகிர்ந்து நடிகர் ரஜினி உருக்கம் | புரமோஷன் நிகழ்ச்சியில் உற்சாகத்தை அடக்க முடியாமல் துள்ளல் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் | தண்டேல் படக்குழுவினருக்கு மீன் கறி சமைத்து பரிமாறிய நாக சைதன்யா | லோக்கல் கேபிள் சேனலில் கேம் சேஞ்ஜர் படத்தை ஒளிபரப்பிய நபர் கைது | கவுதம் மேனன் டைரக்ஷனில் நடிக்கும் விஷால் | 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துல்கர் சல்மானை இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | சுப துக்க நிகழ்வுகளில் மம்முட்டியின் நிழல் போல தொடரும் இளம் நடிகர் | சிங்கம் பின்னணி இசை ஒலிக்க படப்பிடிப்புக்கு வந்த மலையாள நடிகர் | சுரேஷ்கோபி படத்தில் வில்லனாக இணைந்த கபீர் துகான் சிங் | 2025 சங்கராந்தி - வெளியான மூன்று தெலுங்குப் படங்களும் 100 கோடி வசூல் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்துள்ளார். இந்த படம் இந்திரா பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சியை (அவசரநிலை பிரகடனம்) மையமாக கொண்டு உருவாகி உள்ளது. இதில் இந்திராவாக கங்கனா நடித்துள்ளார். இந்த படம் இந்திராவை சர்வாதிகாரியாக சித்தரிப்பதாகவும், படத்தில் இந்திரா பற்றி தவறாக சித்தரித்திருந்தால் படம் வெளியாகும் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் படம் வருகிற 17ம் தேதி வெளியாகும் என்று கங்கனா அறிவித்துள்ளார். காங்கிரஸ்காரர்களை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி உள்ளார். முன்பு இந்திரா பற்றி கடுமையாக விமர்சித்து வந்த கங்கனா இப்போது அவரது புகழ்பாட தொடங்கி உள்ளார். அதோடு படத்தை பார்க்க வருமாறு காங்கிரசாருக்கும் குறிப்பாக பிரியங்காவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எமர்ஜென்சி திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி பிரியங்காவுக்கு நான் அழைப்பு விடுத்தேன். பார்லிமென்டில் நான் பிரியங்காவை சந்தித்தேன். அப்போது முதலில் நான் அவரிடம் சொன்னது, நீங்கள் 'எமர்ஜென்சி' படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் மிகவும் கனிவுடன் 'நிச்சயம், பார்க்கலாம்' என்றார். மீண்டும் நான் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்கும் என்று கூறினேன்.
இந்திராவை திரையில் கண்ணியமாக சித்தரிப்பதில் நான் அதிக கவனத்துடன் இருந்தேன். ஏனெனில் இந்திராவும் மிகவும் விரும்பப்படும் தலைவர். எமர்ஜென்சியின் போது நடந்த சில விஷயங்கள் தவிர, அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். மக்களால் மிகவும் கொண்டாடப்பட்டார். மூன்று முறை பிரதமராக இருப்பது சாதாரணம் அல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.