குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி பிரமுகருமான கோவிந்தா இன்று (அக்.,1) அதிகாலை 4:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மேலாளர் சுஷி சின்ஹா கூறுகையில், ''இன்று கோல்கட்டா செல்வதற்காக கோவிந்தா தயாராகி கொண்டிருந்தார். அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது அதிலிருந்த குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் இருக்கிறார்'' என்றார்.