25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
பிரபல பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி பிரமுகருமான கோவிந்தா இன்று (அக்.,1) அதிகாலை 4:45 மணியளவில் வீட்டில் இருந்தபோது தவறுதலாக காலில் சுட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில், எதிர்பாராத விதமாக காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும், காலில் இருந்த துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது மேலாளர் சுஷி சின்ஹா கூறுகையில், ''இன்று கோல்கட்டா செல்வதற்காக கோவிந்தா தயாராகி கொண்டிருந்தார். அவரிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி தவறுதலாக கீழே விழுந்தது. அப்போது அதிலிருந்த குண்டு கோவிந்தாவின் காலில் பாய்ந்தது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. தற்போது உடல் நலத்துடன் இருக்கிறார்'' என்றார்.