மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
கங்கனா ரணாவத் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்து உள்ளார். கடந்த 6ம் தேதி படம் வெளிவருவதாக இருந்தது. சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் படம் வெளியாகவில்லை.
தணிக்கை குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து கங்கனா மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “அரியானா சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தனது படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக” கங்கனா தனது மனுவில் கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் 'எமர்ஜென்சி' படத்தை வெளியிடலாம் என தணிக்கை குழு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்தநிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரணாவத் ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தணிக்கை குழு தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.