கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கங்கனா ரணாவத் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையப்படுத்தி இந்த படத்தை எடுத்து உள்ளார். கடந்த 6ம் தேதி படம் வெளிவருவதாக இருந்தது. சீக்கிய அமைப்பினர் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய தணிக்கை குழு படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் படம் வெளியாகவில்லை.
தணிக்கை குழுவின் நடவடிக்கைகளை எதிர்த்து கங்கனா மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “அரியானா சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் காரணங்களுக்காக தனது படத்துக்கு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக” கங்கனா தனது மனுவில் கூறியிருந்தார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கினால் 'எமர்ஜென்சி' படத்தை வெளியிடலாம் என தணிக்கை குழு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்தநிலையில் நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தணிக்கை குழு சார்பில் ஆஜரான வக்கீல், படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க நடிகை கங்கனா ரணாவத் ஒப்புக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதால் படத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தணிக்கை குழு தரப்பில் ஐகோர்ட்டில் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.