மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டு காலம் ஜெயில் தண்டனை வழங்கியது சுப்ரீம் கோர்ட். ஆனால் அதை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்ததையடுத்து 5 ஆண்டாக தண்டனைக்காலம் குறைக்கப்பட்டது.
மேலும், ஏற்கனவே 18 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த சஞ்சய்தத்தை எஞ்சியுள்ள தண்டனையை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், 6 மாதம் அவகாசம் கேட்ட அவருக்கு 4 வாரம் அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது தனக்கு அளிக்கப்பட்டுள்ள 5 ஆண்டு தண்டனையை எதிர்த்து மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். டில்லியில் உள்ள சஞ்சய்தத்தின் சட்ட நிபுணர்கள்குழு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாம்.
அடுத்த வாரம் இந்த மனு விசாரணைக்கு வருகிறது. ஒருவேளை இந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தால், மே 18-ந்தேதி சஞ்சய்தத் கோர்ட்டில் சரணடைந்து சிறைதண்டனை அனுபவித்தாக வேண்டும்.