நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் |
நாட்டையே உலுக்கிய மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இந்த சம்பவம் என்னை மிகப்பெரிய அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது என்று கூறியுள்ள இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்த மாதிரி செயல்களை செய்கிறவர்களை மிருகங்களைவிட கேவலமானவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே பாலியல் பலாத்காரம் நடந்த அதே டில்லியிலேயே மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சியாக உள்ளது. அதுவும் இதுபற்றி அந்த 5 வயது குழந்தையின் பெற்றோர் புகார் அளித்த இரண்டு நாட்களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது காவல்துறை. நம்முடைய நாட்டில் ஏன் எதற்காக இப்படியெல்லாம் நடக்கிறது. இந்த குற்றவாளிகளை மக்கள் மன்றத்தில் முன் நிறுத்த வேண்டும்.
மேலும், இதுபோன்ற பாலியல் குற்றவாளிகளுக்கு ஜெயில் தண்டனை மட்டுமே போதாது, அவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். காரணம், பெண்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்கிறவர்கள் தீவிரவாதிகளை விட கொடுமையானவர்கள் என்றும் கூறியுள்ளார் அமிதாப்.