மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நடன இயக்குனர், நடிகர் என்பதை கடந்து, சமீபகாலமாய் இயக்குனராக பெரிய அளவில் வெற்றி பெற்று வருகிறார் பிரபுதேவா. விஜய் நடித்த, "போக்கிரி படத்தில் இயக்குனர் அவதாரம் எடுத்தவர், "வாண்டட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும், கால்பதித்து, முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்து வருகிறார்.தற்போது, ஒரு மாறுதலுக்காக, "ராமையா வாஸ்த வைய்யா என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர், அடுத்து ஷாகித் கபூர் நடிக்கும், "ராம்போ ராஜ்குமார் படம் மூலம், மீண்டும் இந்தியை தொடருகிறார்.பிரபுதேவா கூறும்போது, "தமிழ், தெலுங்கு சினிமாக்கள் மூலம், இயக்குனரான போதும், இந்தி சினிமா என்னை மிகப்பெரிய இடத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அங்குள்ள முன்னணி ஹீரோக்களே, என் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் வருங்காலங்களில், இந்தி சினிமாவுக்கே முதலிடம் கொடுப்பேன் என்கிறாராம்.