தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா |
பிரியங்கா சோப்ராவும், ரண்பீர் கபூரும், மாஜி காதலர்கள். சில ஆண்டுகளுக்கு முன், இருவரும், நெருக்கமாக காதலித்து வந்தனர். யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவர்களின் காதல், பிரேக் அப் ஆகி, இருவரும், பிரிந்து விட்டனர். ஒருவரை ஒருவர், நேரில் சந்தித்தால் கூட, முகம் கொடுத்து பேசுவது இல்லை.ஆனால், காலம், இப்படியே போய் விடுமா என்ன? "யே ஜவானி ஹை திவானி என்ற படத்தில், இருவரும், ஒன்றாக நடிக்கின்றனர். காதலில் பட்ட காயம், மனதில் இருந்தாலும், இருவரும், அதை வெளிக்காட்டாமல், படத்தில் நடித்து முடித்து விட்டனர். ஆனால், படத்தை விளம்பர படுத்தும் நிகழ்ச்சி, சமீபத்தில் மும்பையில் நடந்தபோது, எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மீடியாக்காரர்கள், படத்தை பற்றி கேட்பதை விட, பிரியங்கா - ரண்பீரின் கடந்த கால காதல் பற்றியே, கேள்விகளை கேட்டனர். ஒரு கட்டத்தில், கண்ணீர் விட்டு அழுது விட்டார், பிரியங்கா. அருகில் அமர்ந்திருந்த, மாஜி காதலர், ரண்பீர் தான், பிரியங்காவை தேற்றினாராம்.