தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழில் பைவ் ஸ்டார், கந்தசாமி, திருட்டுபயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசி.கணேசன். இவர் தற்போது இயக்கி உள்ள ஹிந்தி படம் 'தில் ஹெ கிரே'. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் வினித்குமார் சிங், அக்ஷய் ஓபராய், ஊர்வசி ரவுட்டேலா நடிதிருக்கிறார்கள். எம்.ரமேஷ் ரெட்டி தாயாரித்திருக்கிறார்.
சோசியல் மீடியாக்களின் வளர்ச்சியால் தனிமனித சுதந்திரம் எப்படி பாதிக்கிறது. அந்தரங்கம் எப்படியெல்லாம் திருடப்படுகிறது என்பதை உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. தற்போது இந்த படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட இந்திய அரசின் சார்பில் அனுப்பபட்டுள்ளது. இந்த திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுசி கணேசனும், ஊர்வசி ரவுட்டோலாவும் டொராண்டோ சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுசி கணேசன் கூறும்போது “இந்திய அரசின் தேர்வு இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். அதிலும், முதல் காட்சி டொராண்டோ திரைப்படவிழாவில் திரையிடப்படுவது, உலக மார்க்கெட்டின் பார்வை இப்படத்தின் பக்கம் திருப்பியிருக்கிறது” என்றார்.