ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடிப்பில் கடந்த 2001ல் வெளியான படம் கடார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் கடார் 2 என்கிற பெயரில் வெளியானது. முதல் பாகத்தை இயக்கிய அனில் சர்மாவே இந்த படத்தையும் இயக்கியிருந்தார். அதில் கதாநாயகியாக நடித்திருந்த அமிஷா பட்டேல் தான் இந்த படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ஜெயிலர், ஓ மை காட் 2 ஆகிய படங்களுடன் போட்டியிட்டு வெளியானாலும் 500 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் அடுத்ததாக 2007ல் தான் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற அப்னே படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் சன்னி தியோல். இதன் முதல் பாகத்தை கடார் 2 பட இயக்குனர் அனில் சர்மா தான் இயக்கி இருந்தார் என்பதால் தற்போது கடார் 2 வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்தையும் அவரை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு இரண்டாம் பாகம் உருவாவது குறித்து சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொண்டுள்ள சன்னி தியோல், “கடார் 2 வெளியாவதற்கு முன்பாக இந்த அப்னே படத்தின் இரண்டாம் பாகத்தில் எனக்கு அம்மாவாக நடிக்க பல நடிகைகளை கேட்டபோது தயங்கினார்கள். ஆனால் தற்போது கடார் 2 படத்தின் வெற்றியால் பலரும் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு எனக்கு அம்மாவாக நடிக்க முன் வந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.