நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான ஜவான் திரைப்படம் கடந்த ஏழாம் தேதி வெளியானது. வெளியான நாள் முதல் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நான்கு நாட்களில் 500 கோடியை தாண்டி வசூலித்துள்ளது. இந்த படத்தின் மூலம் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, அனிருத் என தமிழ் பிரபலங்கள் பலரை இந்திக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அட்லீ. அதேசமயம் ஏற்கனவே ஷாரூக்கானுடன் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிய பிரியாமணியும் இந்த படத்தில் ஷாரூக்கானின் ஆக்சன் டீமில் உள்ள பெண்களில் ஒருவராக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஜிந்தா பந்தா என்கிற பாடல் பிரியாமணி உள்ளிட்ட சிறைக்கைதிகளுடன் ஷாருக்கான் ஆடிப்பாடும் விதமாக படமாக்கப்பட்டது. இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது முதலில் பிரியாமணி, ஷாரூக்கானின் பின்னால் நின்று ஆடிக் கொண்டிருந்தார். இதை கவனித்த ஷாரூக்கான், பிரியாமணியிடம் என் பின்னால் நின்று என்ன செய்கிறாய் என்று கேட்க, என்னை இங்கே தான் நின்று ஆடும்படி கூறியிருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார் பிரியாமணி.
இதைத் தொடர்ந்து அவரை இழுத்து தனது பக்கத்தில் நிற்க வைத்த ஷாரூக்கான், இந்த பாடல் முழுவதும் நீ இங்கே தான், என் அருகில் நின்று தான் ஆட வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல ஷோபி மாஸ்டரை அழைத்து நீங்கள் என்ன விதமாக இந்த பாடலுக்கு நடனம் வடிவமைத்திருந்தாலும், நான் இப்போது செய்துள்ள மாற்றத்தால் இடைஞ்சல் வந்தாலும் அதுபற்றி எனக்கு கவலை இல்லை. பிரியாமணி சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் எனக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்தவர். அவர் இந்த இடத்தில் இருந்து தான் ஆடுவார் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் பிரியாமணி