மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"யாரடி நீ மோகினி" படத்தில் தங்கச்சி பாப்பாவாக அறிமுகமான சரண்யா மோகன் "வெண்ணிலா கபடி குழு"வில் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாவும், தங்கையாகவும் நடித்தார். "அழகர்சாமியின் குதிரை"யில் தேசிய விருதை நழுவ விட்டார். இப்போது சரண்யா மோகன் பாலிவுட் நடிகையாகிவிட்டார்.
"வெண்ணிலா கபடிகுழு" படம் இந்தியில் "பதல்பூர் பாய்ஸ்" என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. பாலிவுட்டின் பிரபலமான எடிட்டர் முத்து தயாரிக்கிறார். சைலேஷ் வர்மா இயக்குகிறார். விஷ்ணு நடித்த கேரக்டரில் நிஷான் நடிக்கிறார். "டேவிட்" இந்தி பதிப்பில் ஜீவா வேடத்தில் நடித்தவர்.
இதுகுறித்து இயக்குனர் சைலேஷ் வர்மா கூறும்போது. "ஹீரோயின் கேரக்டருக்கு குழந்தைத் தனமாக கிராமத்து பெண்ணை தேடினோம். சரண்யா மோகன் அளவுக்கு யாருமே அமையவில்லை. இதனால் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்து விட்டோம்" என்றார்.