கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் கடந்த 1998ல் ஹிந்தியில் வெளியான படம் சத்யா. அதுவரை வில்லன் நடிகராக நடித்து வந்த ஜே.டி சக்கரவர்த்தி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தியன் படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ரங்கீலா புகழ் ஊர்மிளா தான் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாக இது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் பெற்றது. சொல்லப்போனால் ராம் கோபால் வர்மாவின் படங்களுக்கு என ஒரு தனி ரசிகர் வட்டத்தை பாலிவுட்டில் இந்த படம் ஏற்படுத்தியது.
இந்த படம் வெளியாகி நேற்றுடன் 25 வருடங்களை தொட்டுள்ளது. இந்த படம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகி ஊர்மிளா. அதேசமயம் இந்த படம் வெளியாகி 25 வருடங்களாகியும் அவர் இன்னும் ஒரு மனக்குறையுடன் தான் இருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படம் வெளியான சமயத்தில் தான் மிகவும் கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து பிசியாக இருந்து வந்ததாகவும் அந்த சமயத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற கதாபாத்திரத்தில் கிளாமர் இல்லாமல் இந்தப்படத்தில் நடித்திருந்தேன். ஆனால் இதற்காக எனக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு விருதுக்கும் நான் நாமினேட் கூட செய்யப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ஊர்மிளா.