நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கரண் ஜோஹர் இயக்கத்தில், பிரீதம் இசையமைப்பில், ரன்வீர் சிங், ஆலியா பட், ஜெயா பச்சன், ஷபனா ஆஸ்மி, தர்மேந்திரா மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படமான 'ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் டிரைலர் இன்று வெளியானது. டிரைலரைப் பார்த்ததுமே 1999ம் ஆண்டில் வெளியான தமிழ்ப் படங்களான 'பூவெல்லாம் கேட்டுப்பார், ஜோடி' ஆகிய படங்கள்தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இரண்டு படங்களின் கதைகளுமே ஒரே கதைகள்தான். காதலர்கள் தங்களது பெற்றோர்களின் சம்மதத்தைப் பெற காதலன் வீட்டில் காதலியும், காதலி வீட்டில் காதலியும் ஒரு காரணத்தைச் சொல்லி நுழைந்து அவர்களது மனதில் இடம் பிடிக்க முயற்சிப்பதுதான் இரண்டு படங்களின் கதை.
அதே கதையைத்தான் இப்போது கரண் ஜோஹர் ''ராக்கி ஹவுர் ராணி கி பிரேம் கஹானி' என பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார். படத்தில் கதாநாயகன் ரன்வீர் பஞ்சாபி பையனாகவும், ஆலியா பொங்காலி பெண்ணாகவும் நடித்திருக்கிறார்கள். இந்தக் கால பாலிவுட் ஸ்டார்கள், அந்தக் கால பாலிவுட் ஸ்டார்கள், கரண் ஜோஹரின் இயக்கம் ஆகியவைதான் இந்தப் படத்திற்கு பிளஸ் ஆக அமையப் போகிறது என்பது டிரைலரைப் பார்த்ததும் தெரிய வருகிறது.
1999ல் தமிழில் வெளியான 'ஜோடி, பூவெல்லாம் கேட்டுப்பார்' ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பைப் பெறவில்லை. அவற்றின் தழுவலாக 24 வருடங்களுக்குப் பிறகு வரப் போகும் இந்த ஹிந்திப் படம் எப்படி வரவேற்பைப் பெறப் போகிறது என்பது படம் வெளியாகும் ஜுலை 28 அன்று தெரிய வரும்.