பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
ஹிந்தி நடிகர் நிதீஷ் பாண்டே(51). ரங்கூன், ஹன்டர், தபாங் 2, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அனுபமா என்ற தொடரில் தீரஜ் கபூர் என்ற வேடத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது.
மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி என்ற ஊரில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் நிதீஷ். வெகுநேரம் ஆகியும் அவர் அறை திக்கப்படவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் போலீஸிற்கு தகவல் தர, அவர்களின் உதவியோடு அறை திறக்கப்பட்டது. அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் பாண்டேவின் மரணம் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.