வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

ஹிந்தி நடிகர் நிதீஷ் பாண்டே(51). ரங்கூன், ஹன்டர், தபாங் 2, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அனுபமா என்ற தொடரில் தீரஜ் கபூர் என்ற வேடத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது.
மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி என்ற ஊரில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் நிதீஷ். வெகுநேரம் ஆகியும் அவர் அறை திக்கப்படவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் போலீஸிற்கு தகவல் தர, அவர்களின் உதவியோடு அறை திறக்கப்பட்டது. அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் பாண்டேவின் மரணம் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




