மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் |

ஹிந்தி நடிகர் நிதீஷ் பாண்டே(51). ரங்கூன், ஹன்டர், தபாங் 2, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அனுபமா என்ற தொடரில் தீரஜ் கபூர் என்ற வேடத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது.
மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி என்ற ஊரில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் நிதீஷ். வெகுநேரம் ஆகியும் அவர் அறை திக்கப்படவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் போலீஸிற்கு தகவல் தர, அவர்களின் உதவியோடு அறை திறக்கப்பட்டது. அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் பாண்டேவின் மரணம் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.