ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஹிந்தி நடிகர் நிதீஷ் பாண்டே(51). ரங்கூன், ஹன்டர், தபாங் 2, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நிறைய டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். அனுபமா என்ற தொடரில் தீரஜ் கபூர் என்ற வேடத்தில் நடித்த இவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது.
மகாராஷ்டிராவில் உள்ள இகட்புரி என்ற ஊரில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் நிதீஷ். வெகுநேரம் ஆகியும் அவர் அறை திக்கப்படவில்லை. இதனால் ஓட்டல் ஊழியர்கள் போலீஸிற்கு தகவல் தர, அவர்களின் உதவியோடு அறை திறக்கப்பட்டது. அங்கு அவர் இறந்து கிடந்தார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்து இருக்கலாம் என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் உடற்கூராய்வுக்கு பிறகே முழுமையான விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதீஷ் பாண்டேவின் மரணம் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.