‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
உலக அழகி பட்டம் பெற்று பின்னர் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இந்த 20 வருடங்களில் தற்போதும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் முன்னணி இடத்தில் தான் இருக்கிறார். அவ்வப்போது பாலிவுட் சினிமா குறித்தும், சில நேரங்களில் தான் கடந்து வந்த பாதை குறித்தும் தனது பேட்டிகளில் கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அப்படி சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை இரண்டு நாட்கள் நடித்த பின்னர் வேண்டாம் என்று உதறிவிட்டு வந்ததாக கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
இது குறித்து அவர் கூறும்போது, “இது நான் சினிமாவில் நுழைந்த புதிதில் பாலிவுட்டில் என்னை தேடி வந்த படம். இதில் எனக்கு உளவாளி கதாபாத்திரம் என்பதால் ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியின்போது எதிர்தரப்பு இளைஞன் ஒருவனை கவர்ச்சியால் உணர்ச்சியை தூண்டி மயக்கும் விதமாக காட்சி படமாக்கப்பட்டது. அந்தக் காட்சியில் நான் ஒரு ஆடையை களைய வேண்டும். ஆனால் என்னுடைய ஆடை வடிவமைப்பாளரிடம் அந்தப் படத்தின் இயக்குநர் என்னை உள்ளாடையில் பார்க்க வேண்டும்; இல்லையென்றால் ஏன் மக்கள் இந்தப் படத்தை வந்து பார்க்கப் போகிறார்கள்? என கேட்டார். மனிதத்தன்மையற்ற ஒரு தருணமாக இருந்தது. அன்றே அந்த படத்தில் இருந்து வெளியேறி கிளம்பி விட்டேன். இந்த தகவலை கேள்விப்பட்ட என் தந்தை இரண்டு நாட்கள் என்னால் அவர்களுக்கு என்ன நஷ்டமானதோ அந்த தொகையை திருப்பிக்கொடுத்து விடு என்று சொன்னதால் அந்தத் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.