அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி | படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா | தக் லைப் விமர்சனம் : திரிஷா அப்செட் |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வரும். சமீபகாலமாக கொலை மிரட்டல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் லண்டனில் இருந்து ஒரு மாணவர் சல்மான்கானுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சல்மான்காள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மெயில் அனுப்பியது லண்டனில் மருத்துவம் படிக்கும் ஹரியானாவை சேர்ந்த மாணவர் என்று கண்டுபிடித்தனர். தற்போது அந்த மாணவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் அந்த மாணவரின் பெற்றோர், தங்கள் மகன் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுத்தால் அவனது மருத்துவ படிப்பு நின்று, எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற கோரிக்கையுடன் அவர்கள் சல்மான்கானை அணுக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் மத்திய அரசு சல்மான்கானுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். “என்னை நோக்கி பல துப்பாக்கிகள் குறிவைத்துள்ளன” என்று அண்மையில் சல்மான்கான் கூறியதும் குறிப்பிடத்தக்கது.