'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வரும். சமீபகாலமாக கொலை மிரட்டல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் லண்டனில் இருந்து ஒரு மாணவர் சல்மான்கானுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சல்மான்காள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மெயில் அனுப்பியது லண்டனில் மருத்துவம் படிக்கும் ஹரியானாவை சேர்ந்த மாணவர் என்று கண்டுபிடித்தனர். தற்போது அந்த மாணவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் அந்த மாணவரின் பெற்றோர், தங்கள் மகன் அறியாமல் செய்த தவறை மன்னிக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுத்தால் அவனது மருத்துவ படிப்பு நின்று, எதிர்காலம் பாழாகிவிடும் என்கிற கோரிக்கையுடன் அவர்கள் சல்மான்கானை அணுக முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால் மத்திய அரசு சல்மான்கானுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவரும் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு படை வைத்திருக்கிறார். “என்னை நோக்கி பல துப்பாக்கிகள் குறிவைத்துள்ளன” என்று அண்மையில் சல்மான்கான் கூறியதும் குறிப்பிடத்தக்கது.