படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகை ப்ரிணிதி சோப்ரா. 2011ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சாம்கிலா, கச்சுலா கில் படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார், தொடர்களிலும் நடித்து வருகிறார்.
ப்ரிணிதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சத்தாவும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. அவர்கள் பொது வெளியில் ஒன்றாக சுற்றுகிற படங்கள் வெளிவந்தது. ஆனாலும் இருவதரும் இது பற்றி வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிற செய்தி வெளியாகி உள்ளது. ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் இருவருக்கும் டுவிட்டர் மூலம் வாழ்த்து சொல்லி வருவது திருமணத்தை உறுதிப்படுத்தி உள்ளது.
வருகிற 13ம் தேதி இருவருக்கும் டில்லியில் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்றும் தெரிகிறது. இந்த தகவல்களை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.