தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். ஹிந்தியில் சில படங்களில் நடித்திருந்தாலும் அங்கு இன்னமும் முன்னணி நடிகைகள் பட்டியலில் அவர் இடம் பெறவில்லை. ஆனாலும், அவரை தெலுங்கு, தமிழில் நடிக்க வைக்க சிலர் தொடர்ந்து முயற்சித்தார்கள். கடைசியாக ஜுனியர் என்டிஆர் நடிக்க உள்ள அவரது 30வது படத்தில் ஜான்வியை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
இப்படத்திற்காக ஜான்விக்கு சம்பளமாக 5 கோடி வழங்கப்படுவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் முன்னணி நடிகைகளின் சம்பளமாக அதிகபட்சமாக 3 கோடி தான் உள்ளது. ஹிந்தியில் இன்னும் முன்னணி நடிகையாக உயராத ஜான்விக்கு 5 கோடி சம்பளம் அதிகம்தான் என்கிறார்கள். அதற்கு உதாரணமாக கியாரா அத்வானிக்கு 'ஆர்சி 15' படத்தில் 4 கோடியை வழங்கியதைச் சொல்கிறார்கள். முன்னணி நடிகையான அவருக்கே 4 கோடி எனும் போது ஜான்விக்கு 5 கோடி அதிகமே என்பதுதான் டோலிவுட் கருத்தாக உள்ளது.
அதே சமயம் 'புராஜக்ட் கே' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனேக்கு 10 கோடிக்கும் அதிகமான சம்பளம் தந்துள்ளார்களாம்.