இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில ஆண்டுகளாகவே தென்னிந்தியாவில் உருவாகி, ஹிந்தியில் வெளியாகும் படங்கள் அங்குள்ள முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்களை விட அதிக அளவில் வசூலித்து வருகின்றன. அந்தவகையில் கேஜிஎப் 2, பாகுபலி 2 ஆகிய படங்கள் ஹிந்தியில் மிகப்பெரிய வசூலை பெற்றன. குறிப்பாக இதுவரை பாலிவுட்டில் வெளியான படங்களில் பாகுபலி 2 படம் 510 கோடி வசூலித்து முதல் இடத்தை தக்க வைத்திருந்தது.
அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேஜிஎப் 2 மற்றும் ஆமிர்கானின் தங்கல் ஆகியவை இருந்தன. பாகுபலி 2வின் இந்த சாதனை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் யாராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் தற்போது இந்தியில் மட்டும் 526 கோடி வசூலித்து பாகுபலி 2 வசூல் சாதனையை ஓவர்டேக் செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பதான் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் சோசியல் மீடியாவில் கூறும்போது, “எனக்கு இது மிகவும் பெருமையான தருணம்.. இந்த படத்தை உற்சாகப்படுத்திய அனைத்து பார்வையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.