பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா |
இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா என சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. 'பாகுபலி 2, புஷ்பா, கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிவந்த பின்பு தென்னிந்தியத் திரைப்படங்களும் இந்தியப் படங்கள் என்ற பெயரை உலக அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்தன.
ஹிந்திப் படங்கள் செய்யாத வசூல் சாதனையை இந்திய அளவில் 'பாகுபலி 2' படம் செய்தது. அந்தப் படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 510 கோடியை வசூலித்திருந்தது. கடந்த ஆறு வருடங்களாக முறியடிக்கப்படாமல் இருந்த அந்த சாதனையை 'பதான்' படம் தற்போது முறியடித்துள்ளது.
பாலிவுட்டின் இழந்த பெருமையை 'பதான்' படமும் ஷாருக்கானும் மீட்டுவிட்டதாக ஹிந்தித் திரையுலகினர் மகிழ்ந்துள்ளனர். அதே சமயம் ஷாருக்கானைப் போல மற்ற ஹீரோக்களின் படங்களும் தென்னிந்தியப் படங்களை மீறி வசூலிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.