நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை வைப்பதற்கு அதிகம் விரும்புவதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் பதான் படத்தில் பைக் சண்டை காட்சிகளும் ஓடும் ட்ரெயின் மேல் நடக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படம் உளவுத்துறை வீரர் மற்றும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு இடையே நடைபெறும் போராட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்திற்காக ஷாருக்கானும் அவருடன் இணைந்து பயணிக்கும் தீபிகா படுகோனும் பிரபலமான ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்கள். அவையும் தத்ரூபமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சித்தார்த் ஆனந்த்.