பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! | விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா! | சாயாவனம்: மலையாள இயக்குனரின் தமிழ் படம் | 'இறுகப்பற்று' படத்தால் பல வாய்ப்புகளை இழந்தேன்: அபர்ணதி | ‛சப்தம்' படப்பிடிப்பு நிறைவு | சின்னத்திரை தொடரில் நடிக்கிறார் சித்தார்த் |
ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை வைப்பதற்கு அதிகம் விரும்புவதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் பதான் படத்தில் பைக் சண்டை காட்சிகளும் ஓடும் ட்ரெயின் மேல் நடக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படம் உளவுத்துறை வீரர் மற்றும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு இடையே நடைபெறும் போராட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்திற்காக ஷாருக்கானும் அவருடன் இணைந்து பயணிக்கும் தீபிகா படுகோனும் பிரபலமான ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்கள். அவையும் தத்ரூபமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சித்தார்த் ஆனந்த்.