20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பாலிவுட் திரையுலகை பொருத்தவரை ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என மூன்று கான் நடிகர்கள் தான் உச்சத்தில் இருந்தாலும் அதிக அளவு ரசிகர்களை கொண்டவராக இருப்பவர் ஷாருக்கான் தான். பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் இவர் தற்போது பதான் என்கிற படத்தில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பேஷ்ரங் என்கிற பாடல் காட்சியால் சர்ச்சைக்கு ஆளானது. வரும் ஜனவரி 25ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் ஷாருக்கான் சமீபத்தில் தன்னை சந்திக்க விரும்பிய ரசிகர்களை நள்ளிரவு இரண்டு மணி அளவில் தான் தங்கி இருந்த ஹோட்டல் அறைக்கே வரவழைத்து சந்தித்து அவர்களை உபசரித்துள்ளார்.
இந்த இன்ப அதிர்ச்சியும் ஆச்சரியமும் விலகாத ரசிகர் ஒருவர் ஷாருக்கானை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் அந்த சந்திப்பு பற்றி குறிப்பிடும்போது, “எந்த ஒரு சூப்பர் ஸ்டாரும் அவருடைய ரசிகர்களுக்காக உங்களை போல இப்படி செய்ததில்லை. நள்ளிரவு 2 மணிக்கு எங்களை நீங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கே வரவழைத்து உங்களுடைய நேரத்தையும் கவனத்தையும் எங்களுக்காக ஒதுக்கி மரியாதை செய்து விட்டீர்கள். உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி. அதேசமயம் நள்ளிரவில் உங்களை தொந்தரவு செய்ததற்காக வருத்தப்படுகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் அந்த ரசிகர்.