இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பாலிவுட் கதாநாயகிகள் ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் வேளையில், நடிகை கங்கனா ரனாவத் வரலாற்று கதைகளிலும் வித்தியாசமான சமூக கதைகள் மற்றும் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் டைரக்ஷனிலும் இறங்கி மணிகர்ணிகா என்கிற படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் எமர்ஜென்சி என்கிற படத்தில் இந்திரா வேடத்தில் நடிப்பதுடன் இந்த படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இதில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கங்கனாவின் தலைவி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்து வருகிறார். இந்தப்படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது.
இதுகுறித்து தற்போது கங்கனா கூறும்போது, “இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அருமையான பாடல்களை தந்துள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றது. ஆனால் நிறைய பேர் இந்த எமர்ஜென்சி படத்திற்கு பாடல்களே தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள். அது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை. நான் பாடல்களை ரொம்பவே விரும்புபவள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய படத்திற்கு பத்து நிமிட நீளமான பாடலுடன் கூடிய இன்டர்வல் பிளாக் இருந்தால் அதிகம் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் கங்கனா.