எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி கடந்த வருடம் வெளியான படம் 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. படத்தின் இரண்டாம் பாகம் பிறகு வெளியாகும் என்று சொன்னார்கள்.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இதுவரை ஆரம்பமாகவில்லை. வருடக் கடைசியில்தான் ஆரம்பமாகி அடுத்த வருடம் இரண்டாம் பாகம் வெளியாகலாம் என்று ஒரு தகவல்.
இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோனே நடிக்கவில்லை, விலகிவிட்டார், நீக்கப்பட்டார் என கடந்த இரண்டு நாட்களாக பாலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்து தீபிகா விலகியதால் 'கல்கி 2' படத்திலிருந்தும் விலகுகிறார் என்றார்கள்.
ஆனால், இரண்டாம் பாகத்தின் 60 சதவீத படப்பிடிப்பை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கிவிட்டார்களாம். மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்புதான் நடக்க வேண்டி உள்ளதாம். தீபிகா இரண்டாம் பாகத்தில் இருக்கிறார், என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.




