தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் தியாகராஜன் தயாரிப்பு, இயக்கத்தில் அவர் மகன் பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில், 2011ல் வெளியான படம் மம்பட்டியான். அந்த படத்தில் தமன் இசையில், நா.முத்துக்குமார் வரிகளில் இடம் பெற்ற மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம உன்ன போல யாரும் இல்ல மாமா .என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இன்றைக்கும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் திருமண வீடுகளில் இந்த பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மணமகன், மணமகள் இந்த பாடலுக்கு உற்சாகமாக ஆடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்திலும் இந்த பாடல் முக்கியமான காட்சியில் இடம் பெறுகிறது. அந்த படத்தில் பயன்படுத்த முறைப்படி படக்குழு அனுமதி பெற்றதா? அப்படி அனுமதி வாங்காத பட்சத்தில் நீங்க நோட்டீஸ் அனுப்பினீர்களா என்று நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ''அந்த பாடல் ஹிட்டானது சந்தோஷம். இன்றும் உலக நாடுகளில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பது இன்னும் சந்தோஷம். டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம் பெற்றது கூடுதல் சந்தோஷம். என்னிடம் யாரும் முறைப்படி அந்த பாடலை பயன்படுத்த அனுமதி வாங்கவில்லை.
டூரிஸ்ட் பேமிலி ஹிட்டான பின்னரும் கூட யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனாலும், என் பாடல் இப்போது வந்திருக்கும் படத்திலும் ஒலித்து இருப்பதை விட வேறு என்ன வேண்டும். திருமண வீடு, விசேஷ வீடுகளில் பலர் என் பாடலை மகிழ்ச்சிக்காக பயன்படுகிறார்கள். அதை பார்த்து நானும் மகிழ்கிறேன். அதை தொடர்ச்சியாக தங்கள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தி பாடலை உயிர்ப்போடு வைத்து இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அது தொடரட்டும்.
யாருக்கும் நோட்டீஸ் அனுப்பமாட்டேன். தமன் இசையமைத்த அந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருந்தாலும், முதல் சில வரிகளை நான்தான் எழுதினேன். குழந்தை வளர்ந்து வெற்றி பெற்றால் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதேபோல் அந்த பாடல் பிரபலமாவதால் எனக்கு மகிழ்ச்சி' என்று சிரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.