ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

நடிகர் தியாகராஜன் தயாரிப்பு, இயக்கத்தில் அவர் மகன் பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில், 2011ல் வெளியான படம் மம்பட்டியான். அந்த படத்தில் தமன் இசையில், நா.முத்துக்குமார் வரிகளில் இடம் பெற்ற மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம உன்ன போல யாரும் இல்ல மாமா .என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இன்றைக்கும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் திருமண வீடுகளில் இந்த பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மணமகன், மணமகள் இந்த பாடலுக்கு உற்சாகமாக ஆடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்திலும் இந்த பாடல் முக்கியமான காட்சியில் இடம் பெறுகிறது. அந்த படத்தில் பயன்படுத்த முறைப்படி படக்குழு அனுமதி பெற்றதா? அப்படி அனுமதி வாங்காத பட்சத்தில் நீங்க நோட்டீஸ் அனுப்பினீர்களா என்று நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ''அந்த பாடல் ஹிட்டானது சந்தோஷம். இன்றும் உலக நாடுகளில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பது இன்னும் சந்தோஷம். டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம் பெற்றது கூடுதல் சந்தோஷம். என்னிடம் யாரும் முறைப்படி அந்த பாடலை பயன்படுத்த அனுமதி வாங்கவில்லை.
டூரிஸ்ட் பேமிலி ஹிட்டான பின்னரும் கூட யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனாலும், என் பாடல் இப்போது வந்திருக்கும் படத்திலும் ஒலித்து இருப்பதை விட வேறு என்ன வேண்டும். திருமண வீடு, விசேஷ வீடுகளில் பலர் என் பாடலை மகிழ்ச்சிக்காக பயன்படுகிறார்கள். அதை பார்த்து நானும் மகிழ்கிறேன். அதை தொடர்ச்சியாக தங்கள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தி பாடலை உயிர்ப்போடு வைத்து இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அது தொடரட்டும்.
யாருக்கும் நோட்டீஸ் அனுப்பமாட்டேன். தமன் இசையமைத்த அந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருந்தாலும், முதல் சில வரிகளை நான்தான் எழுதினேன். குழந்தை வளர்ந்து வெற்றி பெற்றால் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதேபோல் அந்த பாடல் பிரபலமாவதால் எனக்கு மகிழ்ச்சி' என்று சிரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.